ஊரடங்கில் தளர்வுகள்; இ-பதிவு செய்ய குவிந்த மக்கள்! – முடங்கியது இணையதளம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 7 ஜூன் 2021 (10:30 IST)
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் பலர் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க ஒரே சமயத்தில் நுழைந்ததால் இணையதளம் முடங்கியது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ-பதிவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், ப்ளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இ-பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இ-பாஸ் பெற ஒரே சமயத்தில் பலர் விண்ணப்பிக்க முயற்சித்ததால் இ-பதிவு இணையதளம் முடங்கியுள்ளது. இணையதளம் மீண்டும் சில மணி நேரங்களில் செயல்பட தொடங்கும் என கூறப்படும் நிலையில் பலரும் இ-பாஸ் பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?!.. உதயநிதி ஸ்டாலின் டிவிட்!...

அரசு மருத்துவமனையில் மின்விசிறி விழுந்து நோயாளி மரணமா? உறவினர்கள் அதிர்ச்சி...

திமுக எம்.எல்.ஏ கைதுக்கு பாஜக வரவேற்பு.. கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்யாமல் எப்படி இருக்க முடியும்..

கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு.. முழு விவரங்கள்...

பிளஸ் டூ தேர்வில் தோல்வி!.. கண்டித்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!.. சென்னையில் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments