தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு – சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் !

Updated: திங்கள், 20 ஜனவரி 2020 (08:53 IST)
விரைவில் நடக்க இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவின் போது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு நடக்கும் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சோழப் பேரரசின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாக 1000 ஆண்டுகளாக விளங்கி வருகிறது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலின் குடமுழுக்கு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் குடமுழுக்கின் போது தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டுமென தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக ஜனவரி 22 ஆம் தேதி தஞ்சாவூரில் தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் சார்பாக மாநாடு நடத்த உள்ளனர். இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு செய்யப்படும் என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments