திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (16:15 IST)

சுவாதி கொலையில் ராம்குமாருக்கு யாரேனும் உதவினார்களா? : கமிஷனர் தகவல்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்த ராம்குமாருக்கு, அவரது நண்பர்கள் யாரேனும் உதவியுள்ளார்களா என்ற கேள்விக்கு சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.


 

 
சுவாதி கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 
 
இந்த கொலையில் ராம்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. 
 
இந்நிலையில், சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆணையர் “இந்த கொலையில் ராம்குமார் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருடைய நண்பர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருப்பதாய் தெரியவில்லை” என்று கூறினார்.