வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (11:37 IST)

தமிழகத்தில் இன்றும் நாளையும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த முழு ஊரடங்கின்போது பேருந்துகள் கார்கள் ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கையடுத்து இன்றும் நாளையும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இரவு 9 மணிவரை இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.