சரவணா ஸ்டோரில் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
சென்னை சரவணா ஸ்டோரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் அமைந்துள்ளது சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில் வெளியூரிலிருந்து ஆண், பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென மரணம் அடைவது வாடிக்கையாகவே நடந்துவருகிறது. சமீபத்தில் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஜோசப் என்ற இளைஞர் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலியை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அவர் சரவணா ஸ்டோர் ஊழியர்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இது குறித்து மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.