நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயார்; தம்பிதுரை பரபரப்பு பேட்டி

திங்கள், 2 ஏப்ரல் 2018 (08:43 IST)
காங்கிரஸ் ஆதரவு தந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவ அமைப்பினர், விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில் ஜல்லிக்கட்டுக்கு மக்கள் போராடியது போல், காவிரி விவகாரத்திற்கும் அனைத்து அமைப்பினரும் போராடி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றார். மேலும்  காங்கிரஸ் ஆதரவு தந்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்!. காதலுடனோடு சேர்து போட்டு தள்ளிய மனைவி!..

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

அடுத்த கட்டுரையில்
Show comments