வன்னியர்கள் பாமகவிற்கு வர வேண்டாம், ஆனால் ஓட்டு மட்டும் போடுங்கள்: ராமதாஸ்

திங்கள், 13 டிசம்பர் 2021 (08:15 IST)
மாற்று கட்சிகளில் இருக்கும் வன்னியர்கள் பாமகவுக்கு வரவேண்டாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் பாமக வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது இட ஒதுக்கீடு முன்பே கிடைத்து இருந்தால் நாம் கூட்டணி இல்லாமலேயே தமிழகம் முழுவதும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் என்றும் ஆனால் தாமதமாக கிடைத்தது மட்டுமின்றி அந்த இட ஒதுக்கீடும் நீதிபதியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் 
 
மேலும் மாற்றுக் கட்சியில் உள்ள வன்னியர்கள் பாமகவிற்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்றும் அவர்கள் பாமக வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வன்னியர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தான் நான் போராடி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்

எல்லாம் காட்டு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சர்ச்சை: முதல்வர் விஜய் புகைப்படம் வைக்க மேயர் மறுப்பு

பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதம்: நார்வே செய்தியாளரின் சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் .. 1,931 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை

மின்சார வாரியத்தில் 2.5 லட்சம் கோடி கடன்!.. பல முறைகேடுகள்!. சி.டி.நிர்மல் குமார் பேட்டி..

கிறிஸ்துவ ஓட்டு வேணும்னா ஜோசப் விஜய்!.. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments