கிறிஸ்தவ பெண்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்! – புதுக்கோட்டையில் கைது!

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (11:51 IST)
புதுக்கோட்டையில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வந்ததாக தகாத வார்த்தைகளால் பேசிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக மதரீதியான மோதல்களை தூண்டும் விதமான சமூக வலைதள கருத்துகள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் சமீபத்தில் பாஜக பிரமுகர் மனோஜ் செல்வம் கைது செய்யப்பட்ட நிலையில் மத வெறுப்பு, பொது அமைதியை குலைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை என காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வரும் கணேஷ்பாபு என்பவர் அப்பகுதியில் சில கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments