கத்தியுடன் கல்லூரிக்கு வந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

Written By Siva
Updated: வியாழன், 20 ஜூன் 2024 (07:26 IST)
சென்னை பிரசிடெண்ட் கல்லூரியில் கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் கத்தியுடன் பிரசிடெண்ட் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கல்லூரிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து புது வண்ணாரப்பேட்டை அருகே சோதனையின் போது போலீசாரிடம் அந்த மாணவர்கள் சிக்கி உள்ளனர்.
 
குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்து கத்தியுடன் கல்லூரிக்கு செல்வது ஏன் என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு செல்லும் போது கத்தி எடுத்துச் சென்றது ஏன் என்பது குறித்தும் குற்ற செயல்கள் செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு.. விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்...

திமுக ஆட்சியில் போடப்பட்ட இன்னொரு டெண்டர் ரத்து... நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு

செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் திடீர் சோதனை.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி...

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு.. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் திடீர் மாற்றம்...

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments