நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது!!

வியாழன், 25 நவம்பர் 2021 (17:38 IST)
கொரோனா காரணமாக உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் நடைமேடை டிக்கெட் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 
 
இந்நிலையில் நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆகியுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தற்போது கொரோனா தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா குறைவதும் இந்த விலை குறைப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

வயநாட்டில் நிலச்சரிவு!. 5 பேர் வலி!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments