Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்:

Updated: வியாழன், 7 நவம்பர் 2019 (23:06 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது 
 
தனது உடல்நிலை மற்றும் தனது தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரிகள் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர் 
 
இதனையடுத்து அவர் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து வரும் திங்கட்கிழமை பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரோலில் செல்லும் பேரறிவாளன் சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்றும் அவ்வாறு விதிகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்று பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

108 பெருசா?.. திமுக பெருசா?.. சட்டசபையில் கே.என்.நேரு - செங்கோட்டையன் மோதல்!...

விஜயை வைத்து படமெடுத்தா அரசு வேலையா?!.. கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்...

மண்ணில் புதைச்சி வைச்ச ரூ.5 லட்சம்!.. கரையான் அரிச்சி வீணாப்போச்சே!...

இனி நிமிடத்திற்கு 1.5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுக்கள் புக் செய்யலாம்.. ஐஆர்சிடிசி புதிய புரட்சி..

கம்யூனிஸ்ட்கள் முற்றிலும் அவநம்பிக்கையானவர்கள் மற்றும் பலவீனமானவர்கள்: நிர்மலா சீதாராமன்

அடுத்த கட்டுரையில்
Show comments