சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!

புதன், 4 ஜனவரி 2023 (11:55 IST)
சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்! போலீசார் பேச்சுவார்த்தை!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் அதிகரித்ததை அடுத்து 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினர் 
 
இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
ஆனால் போலீசாரின் வேண்டுகோளையும் மீறி தற்போது ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments