Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவு

Written By Sinoj
Updated: சனி, 11 நவம்பர் 2023 (16:34 IST)
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி  பல இடங்களில் பெய்து வருகிறது.  தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 13% குறைவாகப் பெய்துள்ளதாகவும், அக்டோபர் 1 முதல் இன்று வரை 254 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 220.0 மி மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு திசை ககாற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, இராம நாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருது நகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments