Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக மாணவரை அரிவாளால் வெட்டிய 9ம் வகுப்பு மாணவர்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:45 IST)
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் 9ம் வகுப்பு மாணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரிவாளால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவருக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இடையே தண்ணீரை சிந்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை எடுத்துச் சென்று சக மாணவரை 9ம் வகுப்பு மாணவர் வெட்டியதாகவும், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
அரிவாளால் தாக்கி விட்டு அந்த மாணவர் தப்பியோடியதாக நாங்குநேரி ஏ.எஸ்.பி. டாக்டர் பிரசன்ன குமார் தகவல் தெரிவித்துள்ளார்.தற்போது அரிவாளால் வெட்டிய மாணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை வலைவீசி தேடிய வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் அரிவாளால் சக மாணவரை விட்டும் அளவுக்கு விரோதம் வளர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

அயோத்தி ராமர் கோவில் அர்ச்சகர்களுக்கு யூனிபார்ம்.. ஷேவ் செய்து நீட்டாக இருக்க வேண்டும்..

கோவில் எதிரே நூற்றுக்கணக்கான செருப்புகள்.. தன்னுடைய செருப்பை சாட்ஜிபிடி உதவியால் கண்டுபிடித்த இளைஞர்...

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments