Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா...??

Written By Sugapriya Prakash
Updated: புதன், 28 ஜூலை 2021 (13:00 IST)
போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர். 

 
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக வெளியான புகாரின் பேரில் சமீபத்தில் அவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
 
இந்நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை ரூ.2.51 கோடியாக காட்டப்பட்ட நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியில் இருந்தபோது 55% அதிகமான சொத்தை சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை டெண்டர்கள் மூலம் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனிடையே போக்குவரத்துத் துறையில் டெண்டர்பெற்ற நிறுவனங்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை அண்ணாநகரில் உள்ள ரவிக்குமார் என்பவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே விஜயபாஸ்கர் டெண்டர் ஊழலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருமானம்.. தவெக அரசு சாதனை...

வரலாற்று சிறப்புமிக்க ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள்.. முதல்வர் விஜய் சாதனை...

அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...

பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ வேண்டும்: முதல்வர் விஜய் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா.. அமைச்சர் ரமேஷ் பெருமிதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments