ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:53 IST)

10 அடி ஆழ குழிக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற தாய் கைது: அதிர்ச்சி சம்பவம்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்ற தாய் தனது குழந்தையை பத்தடி ஆழ குழிக்குள் போட்டு கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கொசவன்பாளையம் என்ற பகுதியில்  பெண் ஒருவர் பத்தடி ஆழ குழி தோண்டி அதில் தனது பச்சிளம் குழந்தையை போட்டு மேலே மண் கற்களை வைத்து கொல்ல முயன்றதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் உடனடியாக சம்பவம் இடத்திற்கு சென்ற விஏஓ மற்றும் போலீசார் குழுக்கள் இறங்கி குழந்தையை மீட்டனர். உடனடியாக அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையின் பலன் இன்றி பலியானது. 
 
இதனை அடுத்து குழந்தையை கொன்ற குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்த பெண்ணிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran