பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்த எம்.பி.ஏ. மாணவர்.. கரூர் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திங்கள், 27 நவம்பர் 2023 (11:26 IST)
கரூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் கழுத்தை எம்பிஏ மாணவர் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கரூர் மாவட்டம் குளித்தலையில்  தனியார்  பொறியியல் கல்லூரியில்  படித்து வரும் மாணவர்  நிதிஷ்குமார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.   அப்போது பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷ்குமாரின் கழுத்தை எம்பிஏ மாணவர் அண்ணாமலை அறுத்ததாக தெரிகிறது.

இதனால் படுகாயம் அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதனை அடுத்து கழுத்தை அறுத்த எம்பிஏ மாணவர் அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

எல்லாரும் சேர்ந்து டெல்லிக்கு போய் சொல்லுவோம்!.. சட்டசபையில் உதயநிதி சொன்ன ஐடியா!...

தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகுது!. எந்தெந்த ஊரில் தெரியுமா?...

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சி தவெக.. 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள்..

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம்: முதலமைச்சர் விஜய்க்கு விசிக முழு ஆதரவு

தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments