அதிமுகவினரை மீசையின்றி பார்க்க முடியாது - கனிமொழி கிண்டல்

திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:42 IST)
காவிரி விவகாரத்தில் அதிமுகவினரை ஒரு பக்க மீசையின்றி பார்க்க முடியாது என திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் சாலை மறியல் போராடங்களும், ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததே திமுக தான். ஆனால் இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
 
திமுகவினர் இதுவரை காவிரி விவகாரத்தில் எதையாவது பிரயோஜனமாக செய்திருப்பதை நிரூபித்தால் அதிமுகவினர் ஒரு பக்க மீசையை எடுக்கத் தயார் என திமுகவினருக்கு அமைச்சர் சவால் விடுத்தார். மேலும் திமுகவினரின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என கூறினார்.
ஆந்திர மாநில முதலமைச்சரை சந்தித்த பின் பேசிய திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கனிமொழி, காவிரி விவகாரத்தில் சவால்விட்ட அதிமுகவினரை மீசையில்லாமல் பார்க்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments