அதிக ஆட்களை சேர்த்தால் தங்க மோதிரம் பரிசு: திமுக பளே ப்ளான்!!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:29 IST)
கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் தற்போது தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கோவை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சேனாதிபதி, கோவையில் அதிக வாக்காளர்களைச் சேர்க்கும் திமுகவினருக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
சூலூர் தொகுதி தொடர்பாக சேனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகமாக புதிய வாக்காளர்களைக் கட்சியில் சேர்த்துவிடும் நபர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க மோதிரமும், 2 ஆவது, 3 ஆவது பரிசாக அரை பவுன் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?!.. குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி!..

அஜித் தாயார் மரணம்!.. முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி!...

தென்காசியில் 7 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்!.. அதிர்ச்சி பின்னணி!...

பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments