பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறைத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்..!

புதன், 1 மார்ச் 2023 (08:02 IST)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் ஒன்றாம் தேதி செய்முறை தேர்வு தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று செய்முறை தேர்வு தொடங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பொது தேர்வு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு ஆரம்பமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாமதம் என்று தேர்வு மையங்களுக்கு வருவதற்காக பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்முறை தேர்வுக்கு பின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சீனாவிடமிருந்து வெளியேறி Hisense TV நிறுவனத்துடன் இணையும் LG..

எடப்பாடியாரின் சுயநல அரசியல்.. அதிமுக அழிகிறது.. தவெக வளர்கிறது...

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...

தவெக மீது அதிருப்தில் காங்கிரஸ்?!.. விஜயை ராகுல் சந்திக்காமல் போனதன் பின்னணி!..

கோரிக்கை வைத்த 20 நாட்களில் பேருந்து வசதி.. திராவிடம் 60 வருடங்களில் சாதிக்காததை 10 நாளில் சாதித்த தவெக அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments