நடிகை மீரா மிதுன் மீது பொய்வழக்கு...

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:24 IST)
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

பின்னர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை மீரா மிதுன் மீது பதியப்பட்ட மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.
மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 3 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஓட்டல் நிர்வாகி ஊழியரை மிரட்டியதாக எழும்பூர் போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான விசாரணைக்கு வருகிற 14-ம்தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் போலீசார் நடிகை மீரா மிதுனை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

இந்த வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்ரு ஆஜரானார். அப்போது, அவர் மாஜிஸ்திரெட்டிடம் , போலீஸார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்குத் தூண்டுவதாகப் புகார் தெரிவித்துக் கதரி அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும், நடிகை மீரா மிதுன் தன்னைக் கைது செய்ய முடியாது என போலீஸாரிக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றைத் தனது ஆண்நண்பருடன் இணைந்து அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments