ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:44 IST)

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
சென்னை அரக்கோணம் பகுதியிலுள்ள கடம்பத்தூர்–திருவாலங்காடு இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
 
இதன் காரணமாக சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.25, 9.10 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (வ.எண்:43407/43409), மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்(43505), செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று முதல் 15 நாட்கள் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.