Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்..!

Written By Mahendran
Updated: திங்கள், 5 ஜூன் 2023 (15:01 IST)
தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
 
மரம் வளர்ப்போம்... மரம் வளர்ப்போம்.... மரம் வளர்ப்போம்... சுற்றுச்சூழலைக் காக்கும் மாபெரும் அறம் செய்வோம்! 
 
நம்மைத் தாங்கும் பூமித்தாயின் உடல் நாளுக்கு நாள் வெப்பமடைந்துக் கொண்டிருக்கிறது. தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை. மரம் வளர்ப்பதன் மூலமாக மட்டுமே பூமித்தாயையும், சுற்றுச்சூழலையும் காக்க முடியும். 
 
அது தான் இன்றைய நிலையில் மாபெரும் அறம் ஆகும். அந்த அறத்தைச் செய்து அன்னைபூமியைக் காக்க உலகச்  சுற்றுச்சூழல் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!
 
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் இந்த பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகம் வழியாக சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி.. கடைசி நாளான இன்று வெளியான ட்விஸ்ட்..

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா?

2028ல் மீண்டும் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியா? அமெரிக்க அரசின் சட்டம் இடம் கொடுக்குமா?

மும்பை ஐஐடி வெறும் கல்வி நிலையம் அல்ல.. அது ஒரு இரண்டாவது வீடு.. மாணவரின் நெகிழ்ச்சி பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments