Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முக்கிய தீர்மானம்..!

Written By Mahendran
Updated: சனி, 4 ஜனவரி 2025 (12:46 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும், இ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் அதில் போட்டியிட இருப்பதாகவும் திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மறைந்தார். இந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் கடந்த டிசம்பர் மாதம் காலமானார்.
 
தற்போது, இ.வி.கே.எஸ். இளைய மகன் சஞ்சய் சம்பத் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி மாதம், டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments