Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

Written By Mahendran
Published: சனி, 22 நவம்பர் 2025 (13:13 IST)
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியுடன் தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, காங்கிரஸ் கட்சி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
 
பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அது திமுக கூட்டணியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என்ற யூகங்கள் நிலவிய நிலையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் திமுக கூட்டணியை தொடரவே விரும்புவது உறுதியாகிறது.
 
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கிரிஷ் சோடங்கர் தலைமையில் செயல்படும் இந்த குழுவில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
கூட்டணி பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க இந்த குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஆதவ் அர்ஜுனா மட்டுமே பேசினா நாங்க எப்ப பேசுறது?.. பிரேமலதா கோபம்!...

திமுக தோல்விக்கு இதுதான் காரணம்!.. செயற்குழு கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின்!..

ஐபோன் வாங்கி தராததால் மலையிலிருந்து குதித்த இளைஞர்!.. தாய் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!..

திமுகவில் அதிரடி மாற்றம்!.. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!.. கொடூர கொலைகார ஜோடியை தேடும் போலீசார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments