ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன்: கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின்

திங்கள், 22 நவம்பர் 2021 (13:50 IST)
ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கோவையில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்
 
வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றும் கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ள உள்ளேன் என்றும், அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுவேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார் 
 
அப்படித்தான் அண்ணா கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார் என்று தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், கோவையில் விமான விரிவாக்கத் திட்டத்திற்கு ரூபாய் நூற்றி முப்பத்தி இரண்டு கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்றும் விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னை போலவே கோவை நகரின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தர முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments