திமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

செவ்வாய், 10 மார்ச் 2020 (20:30 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பில் சீதாபதி என்பவர் போட்டியிடார். இவருக்கு 61,879 வாக்குகளும் இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் என்பவருக்கு 61,778 வாக்குகளும் கிடைத்தது. இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 101 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ சீதாபதி வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதியின் வெற்றி செல்லும் என்பது உறுதியாகியுள்ளது
 
ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில் தற்போது இந்த தீர்ப்பு திமுக வட்டாரத்தில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments