Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

Written By Mahendran
Updated: வியாழன், 9 ஜனவரி 2025 (16:40 IST)
நாம் தமிழர் கட்சியின் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், பெரியார் பேசாததை சீமான் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், "பெரியார் பேசியதை தான் சீமான் பேசியுள்ளார் என்றும் அதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார் என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், "பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் சம்பந்தமில்லை. பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கையே இல்லை. வள்ளலாரை விட பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்து விட்டார்?" என்றும் பேசினார்.
 
இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அண்ணாமலை, "பெரியார் பேசியதாக சீமான் கூறியதை எந்த புத்தகத்தில் பெரியார் எழுதியுள்ளார் என்பதை ஆதாரத்துடன் வெளியிட தயார். சீமான் வீட்டுக்கு காவல்துறையினர் வந்தார்கள் என்றால், அந்த புத்தகத்தின் நகலையும் நான்  காண்பிக்கத் தயார். பெரியார் பேசியதை தற்போது பொதுவெளியில் கூற முடியாது. சீமான் பேசியது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார்," என்று கூறியுள்ளார்.
 
சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

கப்பலை அட்டாக் பண்ணா ஈரான் பணத்தில் கை வைப்போம்!. டிரம்ப் வார்னிங்!..

நீட் பிரச்சனையை வைத்து மதக்கலவரத்தை தூண்டும் பதிவுகள்.. பாகிஸ்தானின் 480 சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்...

சமயபுரம், வடபழனி கோவில் நிர்வாகிகள் திடீர் சஸ்பெண்ட்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு...

அப்ப கர்ச்சீப் கட்டிட்டு வந்தாரு!.. இப்ப ஆளயே காணோம்!. விஜயை கலாய்த்த அமீர்!..

தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments