நேர்காணல் ஒரே கட்டம்.. வேட்பாளர் அறிவிப்பு ரெண்டு கட்டம்!? – அடுத்த கட்டத்திற்கு நகரும் அதிமுக!

வெள்ளி, 5 மார்ச் 2021 (10:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நேர்காணல் நடத்திய அதிமுக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக விருப்ப மனு அளிக்க கடைசி தேதி மார்ச் 5 என அறிவித்திருந்த நிலையில் அதை மார்ச் 3 ஆக குறைத்தது. இந்நிலையில் நேற்று விருப்ப மனு அளித்த அனைத்து உறுப்பினர்களிடமும் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது அதிமுக.

தேர்தலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாவட்ட வாரியாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆட்சிமன்ற குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

கரூர் விவகார!ம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் திமுக!..

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதியா? இசிஆர் நட்சத்திர ஓட்டலில் திமுக - அதிமுக பிரமுகர்கள் ரகசிய ஆலோசனையா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: சவரன் ரூ.1,09,600-ஐ எட்டியது!

கம்ப்யூட்டர் டீச்சரே இல்லையா? விருதுநகர் அரசு பள்ளியில் கணினிகள் தூசி படிந்து கிடந்ததை கண்டு அமைச்சர் கீர்த்தனா அதிர்ச்சி!

குதிரை பேரம் என்றால் என்ன? சன் டிவி நிருபருக்கு பாடம் எடுத்த பிரவீன் சக்ரவர்த்தி

அடுத்த கட்டுரையில்
Show comments