ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு: என்ன காரணம்?

செவ்வாய், 21 மார்ச் 2023 (18:16 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் சிவகுமார் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார். 
 
இந்த நிலையில் இவர் பல்லாவரத்தில் பணியாற்றிய போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அதிரடியாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சிவகுமாரின் கார் மற்றும் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும் சோதனை முடிந்த பிறகு இது குறித்த விவரங்களை தெரிவிப்போம் என்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..

விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை.. பரந்தூர் வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.. தவெக அரசு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments