Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை இல்லாததால் மனைவி தற்கொலை; ஏக்கத்தில் கணவனும் தற்கொலை

Updated: சனி, 9 ஜூன் 2018 (08:27 IST)
குழந்தை இல்லாத சோகத்தில் மனைவி மற்றும் கணவன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் இனியும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனையடுத்து வீடு திரும்பிய சந்திரன், சுகன்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுகன்யாவின் பிரிவை தாங்க முடியாத சந்திரன், மனைவி இல்லா உலகத்தில் வாழ முடியாது எனக் கருதி அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
விஷயமறிந்து வந்த காவல் துறையினர், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாம் காட்டு

திடீரென விலை குறைந்த தங்கம்!.. இன்றைய அப்டேட்!..

கரப்பான்பூச்சிகளின் போராட்டம் போல் ராகுல் காந்தி போராட்டம் இல்லை: சசிதரூர்

இந்திய வரைபடத்தில் தவறு.. சுட்டிக்காட்டிய வீராங்கனைக்கு பிரதமர் மோடி பாராட்டு...

கர்நாடக எல்லைக்குள் வராதீங்க.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை.. தமிழக பேருந்துகள் நிறுத்தம்...

ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments