95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்: பள்ளிக்கல்வித் துறை தகவல்
கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர்களில் 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அதிகாரி 95 சதவீத உயர்நிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.