1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (09:36 IST)

முழு கொள்ளவை எட்டிய 272 ஏரிகள்: மீதமுள்ளவற்றின் நிலை என்ன?

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. 

 
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
 
கனமழை காரணமாக தமிழகத்தின் நீர்நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுமார் 272 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. ஆம், காஞ்சிபுரத்தில் உள்ள 138 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 89 ஏரிகளும், திருவண்ணாமலையில் 44 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளன.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 138 ஏரிகள் 100 சதவிகிதமும், 88 ஏரிகள் 75 சதவிகிதமும், 48 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ஏரிகள் 100 சதவிகிதமும், 99 ஏரிகள் 75 சதவிகிதமும்,140 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. 
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும், 34 ஏரிகள் 50  சதவிகிதமும் நிரம்பியுள்ளன.