1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்செக்ஸ் 482-நிஃப்டி 132 புள்ளி உயர்வு

சென்செக்ஸ் நிஃப்டி
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்ற தாழ்வுகளுடன் இருந்த குறியீட்டு எண்கள் 11 மணிக்கு பிறகு அதிகரிக்க ஆரம்பித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 482.32 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,229.75 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 131.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,788.00 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 92.21, சுமால் கேப் 66.70, பி.எஸ்.இ 500- 149.29 புள்ளிகள் உயர்ந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1503 பங்குகளின் விலை அதிகரித்தது. 668 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
About Writer
Webdunia