அப்பாவுக்கு நிர்வாண செல்பி அனுப்பிய மகள்: என்ன விபரீதம் நடந்தது தெரியுமா?

திங்கள், 3 ஏப்ரல் 2017 (21:14 IST)
உலகம் முழுவதும் செல்பி என்ற வியாதி தொற்றாத ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு செல்பி மோகன் தலைவிரித்து ஆடி வருகிறது. அதிலும் ஒருசில காதலர்கல் தங்களுடைய அந்தரங்க செல்பிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.



 


இவ்வாறு பகிரப்படும் அந்தரங்க, நிர்வாண செல்பிகள் தவறுதலாக வேறு நபர்களுக்கு மாற்றி அனுப்பிவிட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை விவரிக்கும் வகையில் புரானி தில்லி டாக்கீஸ் என்னும் குழுவினர் வீடியோ ஒன்றை படமாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் காதலனின் வற்புறுத்தலுக்கு இணங்கி தான் குளியலறையில் இருக்கும் போது செல்ஃபி எடுத்து தனது காதலனுக்கு அனுப்புகிறார். ஆனால் தவறுதலாக காதலனுக்கு பதில் தன் அப்பாவிற்கு அனுப்பிவிட பெரும் பிரச்னையாகிவிடுகிறது

அப்பா, மகளை கூப்பிட்டு கண்டிக்கின்றார். மகள் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இந்த செல்பியை அம்மாவுக்கு அனுப்பினால்தான் இனிமேல் நீ சரியாக நடந்து கொள்வாய் என்று அம்மாவுக்கு அனுப்புகிறார். ஆனால் அவர் தவறுதலாக தனது மனைவிக்கு அனுப்புவதற்கு பதிலாக  தன் மார்க்கெட் நண்பர்கள் குரூப்பிற்கு அனுப்பி விடுகிறார். இதோடு வீடியோ முடிந்துள்ளது. எனவே நிர்வாண புகைப்படங்களை ஆன்லைனில் அனுப்பாதீர்கள் அல்லது அனுப்புவதற்கு முன்னர் ஒருமுறைக்கு பலமுறை யோசியுங்கள் என்பதே இந்த வீடியோ இளையதலைமுறைகளுக்கு கூறும் அறிவுரை

எல்லாம் காட்டு

உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை!. உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..

முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..

விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...

சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...

மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..

அடுத்த கட்டுரையில்