கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்கும் எளிய வழிமுறைகள்...!

தக்காளி ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ணுக்கு கீழே உள்ள மென்மையான தோலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வெள்ளரி சாப்பிடுவதால்  இணைப்புத்திசு உற்பத்தியை அதிகரிப்பதோடு, சீரற்ற தோலின் நிறத்தை மாற்ற உதவுகிறது.
பாதாமில் உள்ள வைட்டமின் இ வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் தோல் இழுவைத் தன்மையை குறையும். பச்சை காய்கறிகளில் உள்ள  வைட்டமின்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தோல் அமைப்பை சரி செய்யும்.
 
பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.
உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவி வர, ஒரு சில வாரங்களில் கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.
 
சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும். பொதுவாகவே  முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments