சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் நாயுருவி !!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:15 IST)
காய்ச்சலுக்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும். மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.


நாயுருவி இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும். மேலும் நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது. நாயுருவி வேரை உலரவைத்து பொடித்து சலித்து வைத்து இந்த பொடியை கொண்டு பல் துலக்கிவந்தால் பற்கள் பளபளவென மின்னும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.  சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் நாயுருவி சமுல விழுதை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். 5 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீர் வராமல் சிறுநீர் கடுப்பு இருந்தால் நாயுருவி கதிர்விடாத இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து அதன் சம அளவில் தண்ணீர் கலந்து மூன்று வேளை 3 மில்லி வரை சாப்பிட வேண்டும். இதை குடித்த பிறகு பால் குடிக்க வேண்டும். இதனால் தடைபட்ட சிறுநீர் வெளிவரும். உடம்பில் இருக்கும் நச்சுநீர் வெளியேறும்.

Edited by Sasikala

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments