அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடிய லெமன் டீ !!

பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. இவற்றில் லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக்  கொண்டால் சுவையான லெமன் டீ தயார். 
 
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக  செரிமானம் ஆவதற்கு லெமன் டீ உதவுகிறது, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது.
 
சில நேரங்களில் நமக்கு தலைவலிக்கும் அந்த சமயத்தில் லெமன் டீ குடித்தால் சரியாகிவிடும். இது மன அழுத்தத்தை போக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட  துணைபுரிகின்றது.
 
இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது, ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments