ஜீரண தன்மையை சீராக்கும் இஞ்சி...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (16:57 IST)
 
சுவாசப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இஞ்சி, சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி. இது ஆஸ்துமா மற்றும் பல சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.இது நெஞ்சில் இருக்கும் கபத்தை கரைக்கிறது.
 
உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும். நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும். ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் அவ்வப்போது இஞ்சி  சாப்பிட்டு வந்தார்களேயானால் அவர்களின் ஒவ்வாமை நீங்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
 
இஞ்சி உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். தினந்தோறும் காலையில் சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்ட இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.
 
மாதவிலக்கு வலியைக் குறைக்கும். இக்காலங்களில் அடிவயிற்றில் மிக கடுமையான வலி ஏற்படுகிறது. இக்காலங்களில் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் இருக்கும் மெபனமிக் அமிலம் மாதவிடாய் கால வலியை குறைப்பதில் சிறப்பாக  செயலாற்றுகிறது.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments