வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (18:16 IST)

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

Tirupathi Laddu
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய நிலையில்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி சுப்பா ரெட்டி அதற்கு மறுப்பு தெரிவித்து, நெய்க்கு பதிலாக விலங்குகள் கொழுப்பை கலந்திருப்பதாக சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சந்திரபாபு நாயுடுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷ் என்பவர், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுத்த சுப்பா ரெட்டி எம்பி, ‘திருப்பதி பிரசாதம் குறித்து, சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்றும், எந்த ஒரு மனிதனும் இதுபோன்ற வார்த்தைகளை பேச மாட்டார்கள் என்றும், இந்துக்களின் நம்பிக்கையையும் புனிதத்தையும் காயப்படுத்தி விட்டார் என்றும்  கூறினார்.
 
அத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக மோசமான செயலைச் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் இல்லை என்பதை நானும் எனது குடும்பமும் சத்தியம் செய்கிறோம். அதேபோல் சந்திரபாபு நாயுடுவும் அவர் குடும்பமும் சத்தியம் செய்ய தயாரா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva