உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு நீக்கப்படுகிறதா? யூஜிசி வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு..!

Written By Siva
Updated: ஞாயிறு, 28 ஜனவரி 2024 (10:58 IST)
தற்போது உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை நீக்குவதற்காக யூஜிசி செய்து திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிஸ்சி பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடை நீக்கி இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொது பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மாநில குழு யூஜிசி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒருபக்கம் இடஒதுக்கீடு அவசியம் என ஒரு பிரிவும், இன்னொரு பக்கம் தரமான கல்விக்கு இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று ஒரு பிரிவும் கூறி வரும் நிலையில்   யூஜிசி வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இனி திராவிடத்துக்கு வேலை இல்ல!.. தனுஷ் வருவாரு!.. மோகன்.ஜி. பதிவு!..

உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு இல்லையா? புதிய அறிவிப்பால் பரபரப்பு...!

விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார்... திமுகவினர் ஒவ்வொரு நாளும் நடிக்கின்றனர்: அமைச்சர் மரிய வில்சன்

இன்ஸ்டா விஜய் என்று கேலி செய்தவர்கள், இன்ஸ்டாவை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகிறார்கள்.. இதுதான் மாற்றம்...

நீட் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பாஸ்போர்ட், விசா பெறுவதில் சிக்கலா? சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments