இந்தியாவில் முதன்முறையாக இருமுறை உருமாறிய கொரோனா! – சுகாதாரத்துறை அமைச்சகம்!

வியாழன், 25 மார்ச் 2021 (08:22 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வரும் நிலையில் இருமுறை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிவிட்ட நிலையில் சமீப காலமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதும், மற்ற நாட்டு மாற்றமடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 10,787 மாதிரிகளை சோதனை செய்ததில், 771 உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 736 மாதிரிகள் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவும், 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்க மற்றும் ஒரு பிரேசில் உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சில மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில் இருமுறை உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா எதிர்ப்புசக்திகளுக்கு கட்டுப்படாதது. மேலும் தொற்றை அதிகரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments