பொறியியல் மாணவர்கள் இனி பகவத் கீதையையும் படிக்கவேண்டும்..

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (12:16 IST)
அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவயியல் படிப்பில் பகவத் கீதை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விகுழும அறிவுறுத்தலின் படி, அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு தத்துவயியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பகவீத் கீதை பாடம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் MIT, CEG, ACT, SAP, வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவயியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவயியல் பாடம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

ஹிந்து மதத்தின் புராண கதையான பகவத் கீதையை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக அறிமுகப்படுத்துவது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments