1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (12:12 IST)

எலி கடித்து விட்டது : அமைச்சரிடம் நடிகை புகார்

எலி கடித்து விட்டது : அமைச்சரிடம் நடிகை புகார்

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, தன்னுடைய கைப்பையை எலி ஒன்று கடித்து குதறிவிட்டது என்று நடிகை ஒருவர் அமைச்சரிடம் புகார் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாரப் கடந்த 22ம் தேதி, லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். இரவு, தனது கைப்பையை தலைக்கு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.
 
அப்போது, தனது தலைக்கு மிக அருகில் எலி கீச்சிடும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்துள்ளார். அங்கு ஒரு எலி அவரின் கைப்பையை கடித்து குதறியுள்ளது. 
 
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது கைப்பையை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு டிவிட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.


 

 
இதனையடுத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.