வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (10:00 IST)

பொங்கலுக்கு பின் படிப்படியாக மீண்டு வரும் பங்குச்சந்தை.. இன்றைய நிலை என்ன?

share
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று பொங்கல் தினத்தில் பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை கொண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்த்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இன்று காலை சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 76 ஆயிரத்து 710 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 220 வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாட்டா ஸ்டீல், டெக் மகேந்திரா, எச்டிஎப்சி வங்கி, HCL டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், அப்போலோ ஹாஸ்பிடல், விப்ரோ, பிரிட்டானியா, சிப்லா, சன் பார்மா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

Edited by Siva