மீண்டும் உச்சம் சென்ற சென்செக்ஸ்.. 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:40 IST)
கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை மோசமாக சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் இந்த வாரம் நேற்றும் இன்றும் பங்குச்சந்தை மீண்டும் உச்சத்திற்கு சென்று வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று சுமார் 300 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச்சந்தையின் சென்செக்ஸ், சற்றுமுன் பங்குவர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் குஷியில் உள்ளனர் 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் 60 ஆயிரத்தை சென்செக்ஸ் நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த வாரம் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இந்த வாரம் மீண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments