சென்னை கிங்ஸ் அணியில் மற்றொரு வீரருக்கு கொரொனா !

புதன், 5 மே 2021 (18:12 IST)
ஐபிஎல்-2021 கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டுள்ள நிலையில், சூப்பர் லீக் முடியும் முன்னமே சென்னை கிங்ஸ், ஹைதராபாத் அணி வீரர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

ஏற்கனவே இந்தியாவில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மற்றொரு சென்னை அணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று சென்னை கிங்ஸ் அணியின்  பந்துவீச்சாளர் பாலஜிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்   சென்னை அணியின்பயிற்சியாளர் மை ஹசிக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments