நான் சொன்னது லஷ்மனுக்கு கேட்டுவிட்டதோ? சஹாவின் பேட்டிங் பற்றி சேவாக் கருத்து!

புதன், 28 அக்டோபர் 2020 (16:15 IST)
சில நாட்களுக்கு முன்னர் சேவாக் ஹைதராபாத் அணியில் ஏன் விருத்திமான் சஹாவை இறக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர் அவர் மும்பை அணியின் பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் சவுரவ் திவாரி ஆகியோரை வடா பாவ் மற்றும் சமோசா பாவ் எனக் கேலி செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விருத்திமான் சஹா சிறப்பான பேட்டிங்கை மேற்கொண்டார். அவர் இந்த சீசனில் இறங்கிய முதல் போட்டி அதுதான். இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய சேவாக் ‘நான் சில நாட்களுக்கு முன்னர்தான் அனுபவமும் திறமையும் வாய்ந்த சஹாவை ஏன் இறக்கக் கூடாது எனக் கேட்டிருந்தேன். அது லஷ்மனுக்கு கேட்டுவிட்டது போல’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments