சிக்னலுக்கு வழி இல்லை, ஆனால் அன்லிமிட்டெட் ஆஃபர்...

சனி, 17 மார்ச் 2018 (12:55 IST)
தொலைத்தொடர்பு துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது. ஆனால், சமீபத்தில் சிக்னல் பிரச்சனைகளும் அதிக அளவில் உள்ளது. 
 
இந்நிலையில், வோடபோன் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.18-க்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. 
 
திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் அல்லது அதிக மெமரி கொண்ட தரவுகளை டவுன்லோடு செய்ய இந்த சலுகை சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆனதில் இருந்து ஒருமணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படும்.
 
ஆனால், தற்போது பெரும்பாலான தொலைத்தொடர் நிறுவன சிக்னல்கள் சரியாக கிடைப்பதில்லை. ஏர்செலில் துவங்கி, அடுத்து ஜியோ, ஏர்டெல், வோடபோன் என இந்த பிரச்சனை நீள்கிறது.
 
இதனால் என்ன சலுகை வழங்கினாலும், சிக்னல் இருக்க வேண்டும் அல்லவா என்பது வாடிக்கையாளர்களின் குரலாக உள்ளது.

எல்லாம் காட்டு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 சிறப்பு தரிசனம் ரத்து.. அனைவருக்கும் பொது தரிசனம் தான்...

எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை.. அதிமுக ஒற்றுமையாக உள்ளது: எஸ்பி வேலுமணி விளக்கம்..!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சிவி சண்முகம்?!.. நடப்பது என்ன?..

அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீங்க!.. விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!...

டெல்லியில் விஜய்!.. கருணாநிதி கால அணுகுமுறை மீண்டும் திரும்புமா?!.

அடுத்த கட்டுரையில்
Show comments