பிஎப் பணத்தை பத்தே நாட்களில் பெறலாம்!!

புதன், 17 மே 2017 (14:57 IST)
வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை தற்போது குறைத்துள்ளது. 


 
 
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் திட்டத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை 45 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்தது. தற்போது இது குறைந்தபட்சம் 10 நாட்களாகவும், அதிகபட்சம் 15 நாட்களாகவும் இருக்குமென அறிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆன்லைனிலேயே பிஎஃப் செட்டில்மெண்ட் கோரி விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியது.

பிஎஃப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொழிலாளர் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகாணும் வகையில், பிஎஃப் செட்டில்மெண்ட் கோரிக்கைகள் பெறப்பட்டு 10 நாட்களிலேயே வழங்கப்படும். பிற குறைகள் தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments